SUKANKINI

உலகக் கோப்பை: தென் கொரியாவை வீழ்த்தி பிரேசில் காலிறுதிக்கு முன்னேறியது

இஸ்தான்புல், டிசம்பர் 6: கடந்த திங்கள்கிழமை, பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில்
தென் கொரியாவை வீழ்த்தி 2022 ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதியில்
குரோஷியாவை எதிர்கொள்ள உள்ளது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஸ்டேடியம் 974யில் ஏழாவது நிமிடத்தில் ராபின்ஹா உதவியோடு வினிசியஸ் ஜூனியர்
தொடக்க கோலை அடித்தார். ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, ரிச்சர்லிசன் ஜங்
வூயோங்கால் தாக்கப்பட்டார், அதனால் நடுவர் பெனால்டி கிக் வழங்கினார்.
பெனால்டியை வலதுகால் ஷாட்யின் மூலம் நெய்மர் வெற்றிகரமாக முடித்தார்.

29வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸின் நடுவில் இருந்து ரிச்சர்லிசன் அடித்த இடது கால்
ஷாட் 3-0 என கோல் கணக்கில் முடிந்தது. 36 வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர்
உதவிய பிறகு லூகாஸ் பக்வேட்டா நான்காவது கோலை அடித்தார்.

தென் கொரியாவின் ஒரே கோலை 76 வது நிமிடத்தில் லாங்-ரேஞ்ச் ஷாட் மூலம் பைக்
சியுங் ஹோ அடித்தார்.

இதன் மூலம் ஆசியாவின் மற்றொரு அணியான ஜப்பானைப் பெனால்டி மூலம் 3-1 என்ற
கோல் கணக்கில் வீழ்த்திய குரோஷியாவைப் பிரேசில் எதிர்கொள்ள உள்ளது. காலிறுதிப்
போட்டி கோத்தா பென்டிடிகன் டோஹா மைதானத்தில் டிசம்பர் 9ஆம் தேதி
நடைபெற உள்ளது.

– பெர்னாமா


Pengarang :