ECONOMYGALERIMEDIA STATEMENT

எருமையுடன் மோட்டார் சைக்கிள் மோதல்- இளம் பெண் மரணம்

சிப்பாங், ஜன 7- ஜாலான் டெங்கில் ஆயர் ஹித்தாம்  சாலையில் இன்று அதிகாலை எருமை மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில், லெஜெண்டா ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 16 வயது மாணவி தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமருல் அஸ்ரான் வான் யூசோப் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த இளம் பெண் டெங்கிலில் இருந்து தாமான் டெங்கில் ஜெயாவில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில்  திரும்பிக் கொண்டிருந்தபோது  திடீரென சாலையைக் கடந்த ஒரு எருமை மாட்டுடன் மோதியதாக அவர் கூறினார்.

தலையில் ஏற்பட்ட காயங்களால் பாதிக்கப்பட்ட அப்பெண் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சுகாதாரப் பணியாளர்கள் உறுதிப்படுத்தப்படுத்தியதாக அவர் தெரிவித்தார். அத்த இளம் பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக புத்ராஜெயா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 41(1)ன் படி இந்த சம்பவம் விசாரிக்கப்பட்டு வருகிறது.


Pengarang :