ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

உலு திரங்கானு மாவட்டத்தில் வெள்ள நிலை சீரடைந்தது

கோலா திரங்கானு, ஜன. 13: உலு திரங்கானு மாவட்டத்தில் நேற்று திறக்கப்பட்ட ஒரு தற்காலிகத் தங்கும் மையம் (பிபிஎஸ்) வெள்ள நிலைமை முழுமையாக சீர் அடைந்த காரணத்தால் இன்று பிற்பகல் மூடப்பட்டது.

பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களைச் சேர்ந்த 71 பேர் தங்கியிருந்த அந்த தற்காலிக தங்கும் மையம் (பிபிஎஸ்) இன்று பிற்பகல் 3 மணிக்கு மூடப்பட்டது மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இருப்பினும், ஜேபிபிஎன் செயலகம் எப்போதும் தயார் நிலையில் இருக்கும், ஏனெனில் மாநிலம் முழுவதும் வானிலை சிறிது மேகமூட்டத்துடன் காணப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :