ALAM SEKITAR & CUACA

இன்று காலை பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், ஜன 28: இன்று காலை வரை சிலாங்கூர் முழுவதும் இடியுடன் கூடியக் கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

இதே நிலைதான் கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா மற்றும் லாபுவான் ஆகிய மாநிலங்களிலும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ட்விட்டர் மூலம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பேராக், நெகிரி செம்பிலான்,ஜொகூர், சரவாக் மற்றும் சபாவிலும் சில குறிப்பிட்ட இடங்களில் இதே வானிலைதான் இருக்கக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர்(மி.மீ./மணி)க்கு அதிகமாக ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக்கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்


Pengarang :