ECONOMYMEDIA STATEMENT

மாநில நிலையிலான  சீனப் புத்தாண்டு பொது உபசரிப்பில் சுல்தான் தம்பதியர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், ஜன 29- இங்கு நேற்றிரவு நடைபெற்ற மாநில அளவிலான இவ்வாண்டு சீனப்புத்தாண்டு பொது உபசரிப்பில் மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் தம்பதியர் கலந்து கொண்டனர்.

ஷா ஆலம் மாநகர் மன்ற மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு இரவு 8.30 மணியளவில் வந்த சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா மற்றும் அவரின் துணையார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியரை மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரவேற்றார்.

முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் மற்றும் மாநில சட்டமன்ற சபாநாயகர் இங் சுயி லிம் ஆகியோரும் மந்திரி புசாருடன் உடனிருந்தனர்.

சுல்தான் அவர்கள் இந்த பொது உபசரிப்பை தொடக்கி வைப்பதற்கு அடையாளமாக மேளத்தை  முழக்கியதோடு யீ சாம் எனும் கூட்டமாக உணவை பகிரும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

பின்னர் சுல்தான் தம்பதியர் நிகழ்வில படைக்கப்பட்ட சிங்க மற்றும் சீன ஓபேரா நடனம், சீன வாத்திய முழக்கம் ஆகியவற்றை கண்டு களித்தனர்.

இன்வெஸ்ட் சிலாங்கூர் ஏற்பாட்டிலான இவ்வாண்டிற்கான இந்த பொது உபசரிப்பு நிகழ்வு இரு அங்கங்களாக நடைபெற்றது. எம்.பி.எஸ்.ஏ. ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் சுமார் 1,200 பிரமுகர்கள் கலந்து கொண்ட வேளையில் ஷா ஆலம் மெர்டேக்கா சதுக்கதில் நடைபெற்ற நிகழ்வில் பொது மக்கள் பங்கேற்றனர்.


Pengarang :