HEALTHNATIONAL

நாட்டில் நேற்று 244 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- ஐவர் பலி

ஷா ஆலம், மார்ச் 3- நாட்டில் நேற்று 244 பேருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று கண்டது உறுதி செய்யப்பட்டது. அவற்றில் இரண்டு வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டது.

இந்த புதிய தொற்றுகளுடன் சேர்ந்து நாட்டில் இந்நோய்த் தொற்றுக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 42 ஆயிரத்து 585ஆக உயர்ந்துள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றுடன் தொடர்புடைய ஐந்து மரணச் சம்பவங்கள் நேற்று பதிவாகின. இதனுடன் சேர்த்து இந்நோய்க்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 36,965ஆக உயர்ந்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் 9,256 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிரத் தாக்கத்தை எதிர் கொண்டுள்ளனர். அவர்களில் 8,896 பேர் அல்லது 96.1 விழுக்காட்டினர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 353 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் எழுவர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ள வேளையில் அவர்களில் இருவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :