ACTIVITIES AND ADSECONOMY

தாமான் மேடான் காலைச் சந்தைக்கு மந்திரி புசார் வருகை- வணிகர்கள், பொதுமக்களுடன் அளவளாவினார்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 12– இன்று பெட்டாலிங் மாவட்ட நிலையில் இங்கு நடைபெறும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வையொட்டி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாமான் மேடான் காலைச் சந்தைக்கு வருகை புரிந்தார்.

காலை 8.00 மணியளவில் மோட்டார் சைக்கிளில் இந்த சந்தைக்கு வந்த அவர், சுமார் 30 நிமிடங்களை அங்கு செலவிட்டு மீன் மற்றும் காய்கறி கடைகளைப் பார்வையிட்டதோடு வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் அளவளாவினார்.

சந்தையில் இருந்தவர்கள் மந்திரி புசாரை மகிழ்ச்சியோடு வரவேற்றதோடு அவரோடு செல்ஃபி எனப்படும் சுயப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டினர்.

பெட்டாலிங் மாவட்ட அதிகாரி டத்தோ முகமது ஜூஸ்னி ஹஷிம், பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமிர், தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் ஷியாம்சுல் பிர்டாவுஸ் முகமது சுப்ரி, ஸ்ரீ செத்தியா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹெல்மி அபுபாக்கார் ஆகியோர் மந்திரி புசாருடன் உடனிருந்தனர்.

இன்று இங்கு நடைபெறும் பெட்டாலிங் மாவட்ட நிலையிலான கித்தா சிலாங்கூர் பென்யாயாங் நிகழ்வில் உணவு விற்பனை, கண்காட்சி, சுகாதாரப் பரிசோதனை, பொது விவாதம், மக்கள் விளையாட்டு ஏசான் ராக்யாட் மலிவு விற்பனை உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Pengarang :