MEDIA STATEMENTYB ACTIVITIES

ஸ்ரீ செத்தியா தொகுதி ஏற்பாட்டிலான விருந்து நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கௌரவிப்பு

சுபாங் ஜெயா, மார்ச் 7- இங்குள்ள சுபாங் எம்பையர் ஹோட்டலில் நேற்றிரவு நடைபெற்ற விருந்து நிகழ்வில் ஸ்ரீ செத்தியா தொகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

கடந்த 15வது பொதுத் தேர்தலின் போது பிரசார நடவடிக்கையில் உதவியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் அந்த தன்னார்வலர்களுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த விருந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹலிமி அபு பாக்கார் கூறினார்.

தொடக்க காலம் முதல் எங்களுக்கு உறுதுதுணையாக இருந்து வந்ததோடு கடந்த 15வது பொதுத் தேர்தலின் போது பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டதற்காக அந்த தன்னார்வலர்களைக் கௌரவிக்கும் நோக்கில் இந்த விருந்து நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த விருந்து நிகழ்வு அவர்களுக்கு உத்வேகத்தையும் வரும் மாநிலத் தேர்தலில் மேலும் துடிப்புடன் செயல்படுதவதற்குரிய ஆர்வத்தையும் ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன் என்று அவர் சொன்னார்.

இந்த விருந்து நிகழ்வில் பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சென் சுங், தாமான் மேடான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷியாம்சுல் பிர்டாவுஸ் சுப்ரி மற்றும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


Pengarang :