பாங்கி, மார்ச் 17: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்படும் சிஸ்வா ரஹ்மா மெனுவை வங்கியிலுள்ள யூனிவர்சிட்டி கெபாங்சான் (யு.கே.எம்) உள்ள ராண்டவ் ராசா உணவகத்தில் உணவின் தரத்தை மதிப்பிடும் வண்ணம் அந்த உணவுகளை தானே சுவைத்தார்.
நவம்பர் 24 அன்று அவர் பிரதமராக தேர்ந்தெடுக்க படத்திலிருந்து அருகிலுள்ள மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், மதிய உணவுக்கு வரும் உள்ளூர் சமூகத்துடன் கலந்து பேசுவதை வாராந்திர வழக்கமாக மேற் கொண்டு இருக்கிறார்.
அந்த சந்தர்ப்பத்தில், மாணவர்களுக்கு வழங்கப்படும் ரஹ்மா மெனுக்களின் சம்பல், காய்கறிகள் மற்றும் வறுத்த மீன்கள் போன்றவற்றின் தரம் உட்பட தயாரிக்கப்பட்ட விதங்களை கண்டு அதனை பரிசோதிக்கும் விதமாக உள்ளூர் மக்களுடன் இணைந்து உணவு உட்கொண்டார் .
மாணவர் பிரதிநிதிகள் தவிர, பிரதமர் யு.கே.எம் துணைவேந்தர் பேராசிரியர் டத்தோ டாக்டர் முகமட் எக்வான் டோரிமான் மற்றும் உயர் தலைமை மற்றும் பல்கலைக்கழக நிர்வாகமும் அப்பொழுது உடன் இருந்தது..
சிஸ்வா ரஹ்மா மெனு என்பது உயர் கல்வி அமைச்சகத்தின் (KPT) ஒரு முன் முயற்சியாகும், இது RM3.50 என்ற குறைந்த விலையில் வழங்கப்படுகிறது மேலும் நாடு முழுவதும் உள்ள 20 பொது பல்கலைக்கழகங்கள் (UA) மற்றும் பாலிடெக்னிக்குகள் இதே மெனுவை வழங்குகின்றன, இதில் B40 குடும்பங்களை சேர்ந்த சுமார் 320,000 மாணவர்கள் பயனடைகின்றனர். .
சாப்பிட்ட பிறகு, அன்வர் யு.கே.எம் குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து, ரண்டவ் ராசா உணவகத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள யுனிவர்சிட்டி கெபாங்சான் மலேசியா மசூதியில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை மேற்கொண்டார்.
– பெர்னாமா