ACTIVITIES AND ADSMEDIA STATEMENTNATIONAL

மைசெல்  நடமாடும்  சேவை வழி அடையாளப் பத்திர விவகாரங்களுக்கு  தீர்வு காண அழைப்பு

கோலசிலாங்கூர், மார்ச் 23 ;- சிலாங்கூர்  மாநில அரசின்  மைசெல்  இயக்கம்  கோல சிலாங்கூர்  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்  மற்றும்  அரசு சாரா அமைப்புகளின்  உதவியுடன் அடையாளப் பத்திர விவகாரத்திற்கு தீர்வு காண  மாபெரும்  இயக்கத்தை நடத்துகிறது.
அது              எதிர்வரும் – 26/03/2023 -ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
                       காலை 10:00 -5:00 மாலை மணி வரை
இடம்-         கோலசிலாங்கூர்  அசாம் ஜாவா மண்டபம்

இங்கு அடையாள அட்டை,சிவப்பு நிற அடையாள அட்டை , பிறப்பு பத்திரம், பிள்ளை தத்தெடுத்தல் விவகாரம், குடியுரிமை விவகாரம் போன்ற விவகாரங்களை எதிர்நோக்கும்  பொது மக்கள், அவர்களிடம்  உள்ள ஆவணங்களுடன்  மைசெல்  அதிகாரிகளை  அணுகுமாறு  அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Pengarang :