ஷா ஆலம், மார்ச் 24- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் நடமாடும் முகப்பிடச் சேவை இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை அம்பாங் ஏயோன் பிக் பேரங்காடியில் நடைபெறுகிறது.
இந்த முகப்பிடச் சேவை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 மணி தொடங்கி மாலை 3.00 மணி வரை நடைபெறும் என்று நகராண்மைக் கழகம் கூறியது.
மதிப்பீட்டு வரி அல்லது குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை இன்னும் செலுத்தாத அம்பாங் வட்டார மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் அவற்றை செலுத்தலாம் என்று அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
தரம் உயர்த்தப்பட்ட முகப்பிடச் சேவையை அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் கடந்த ஜனவரி 31ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. புதிய தோற்றத்திலான இந்த முகப்பிடத்தில் கணினி முறை, விசாலமான இடம், மூத்த குடிமக்கள் மற்றும் பெண்கள் அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தில் உள்ள இரு முகப்பிடங்களில் ரொக்கமாகவும் இணையம் வாயிலாகவும் கட்டணம் செலுத்துவதற்குரிய வசதி உள்ளது.