ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

பிபிஏஎஸ்: புத்தகத்தை இரவல் பெறும் காலம் ஏப்ரல் 1 முதல் ஒரு மாதமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஷா ஆலம், மார்ச் 31: சிலாங்கூர் பொது நூலகக் கழகம் (பிபிஏஎஸ்) புத்தகத்தை இரவல் பெறும் காலத்தை ஏப்ரல் மாதம் முதல் தேதி தொடங்கி ஒரு மாதத்திற்கு நீட்டிக்கிறது.
மார்ச் 1 அன்று புத்தகத்தை இரவல் பெற்றவர்களின் அளவு அதிகரித்த அறிவிப்பிலிருந்து கிடைத்த  கருத்துக்களை தொடர்ந்து நிறுவனம் இந்த முடிவை அறிவித்தது.

“ஆம்! அனைவரின் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்கும். ஏப்ரல் 1 முதல், அனைத்து பிபிஏஎஸ் வளாகங்களிலும் புத்தகத்தை இரவல் பெறும் காலம் ஒரு மாதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

“இரவல்  கால நீட்டிப்பு உங்களுக்கு வாசிப்புப் பொருட்களை படித்து முடிக்க அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.
மார்ச் 1 அன்று, பிபிஏஎஸ் ஒவ்வொரு நபருக்கும் புத்தகத்தை இரவல் பெறும்  வாசிப்பு பொருட்களின் எண்ணிக்கை 10 முதல் 20 பிரதிகள் வரை அதிகரிப்பதாகவும் அறிவித்தது.
மக்கள் அனைத்து மாநில நூலகங்களில் புத்தகங்களை இரவல் வாங்கலாம் அல்லது BooksFly2U சேவை மூலம் ஆர்டர் செய்யலாம்.


Pengarang :