ANTARABANGSANATIONAL

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒ.சி.ஐ. விண்ணப்பங்களை எளிமையாக்குங்கள்-  அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

சென்னை, ஏப் 1- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு    இந்திய அரசு வழங்கும் ஓ.சி.ஐ. எனப்படும் அடையாள அட்டைக்கான (OCI ) விண்ணப்பத்தையும் நிபந்தனைகளையும்  எளிமையாக்கும்படி  மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சாளியினர் இந்த சலுகையை பெறுவதற்கு ஏதுவாக இதற்கான விண்ணப்பம் எளிமைப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஓ.சி.ஐ. அடையாள அட்டைக்கான விண்ணப்ப பாரங்களில் உள்ள பல கேள்விகளை பூர்த்தி செய்ய முடியாத வகையில் உள்ளன. உரிய பதில் அளிக்க முடியாததால் அந்த அடையாள அட்டையைப் பெறுவதில் மலேசிய இந்தியர்கள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர் என்று அவர் சொன்னார்..


Pengarang :