உலு சிலாங்கூர், ஏப் 27 – கோல குபு பாரு இடைத் தேர்தலை முன்னிட்டு தகவல் இலாகாவுடன் இணைந்து தகவல் தொடர்பு அமைச்சு ஊடக மையத்தை அமைத்துள்ளது.
இந்த மையம் ஜாலான் பகாங்கில் உள்ள உலு சிலாங்கூர் அம்னோ கட்டிடத்தின் நிலை 1 இல் உள்ள கோல குபு பாரு தேசிய தகவல் பரப்பு மையத்தில் (நாடி) அமைந்துள்ளது.
இன்று தொடங்கி மே 11ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த மையம் செயல்படும்.
இங்கு வழங்கப் பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தி ஊடக மையத்திலிருந்து செய்திகளை அனுப்ப ஊடக பிரதிநிதிகள் அழைக்கப் படுகிறார்கள் என்று அமைச்சு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேல் விபரங்களுக்கு 012-3420989 என்ற எண்ணில் முகமது ஹிகல் அரிபின் மற்றும் 012-3677134 என்ற எண்ணில் முகமது ஃபைஸ் அம்சார் முகமது ஆரிப் ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.