பெஸ்தாரி ஜெயா, ஏப் 9- இங்குள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி ஆலயத்தில் பங்குனி உத்திர விழா கடந்த புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து திருமுருகப் பெருமான் திருவருளைப் பெற்றனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் தாகம் தணிப்பதற்காக கோல சிலாங்கூர் கெஅடிலான் தொகுதி மலேசிய இந்திய இளைஞர் மன்றத்துடன் இணைந்து தண்ணீர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு பானங்களை இலவசமாக வழங்கியது.
இந்த திருவிழாவின் போது சுமார் 1,000 பக்தர்களுக்கு குளிர்பானங்களும் லட்டுகளும் விநியோகிக்கப்பட்டதாக கோல சிலாங்கூர் நகரண்மைக் கழக உறுப்பினர் எம்.சிவபாலன் கூறினார்.
சுமார் 4,000 வெள்ளி செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிகழ்வுக்கு மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் பெஸ்தாரி ஜெயா கிளை பொறுப்பாளர்கள் முழு ஆதரவு வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
கோல சிலாங்கூர் தொகுதி கெஅடிலான் தலைவர் தீபன் சுப்பிரமணியம், நகராண்மைக் கழக உறுப்பினர் நந்தகுமாரி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.