ECONOMYSELANGOR

 செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் தாமான் மஸ்னாவில் நோன்புப் பெருநாள் உபசரிப்பு

கிள்ளான், மே 15- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு இங்குள்ள கம்போங் ஜாவா, தாமான் மஸ்னாவில் நேற்று முன்தினம் நண்பகல் 12.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மூவினங்களையும் சேர்ந்த பொது மக்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.

பல்லின மக்கள் ஒன்று சேர்ந்த கலந்துரையாடுவதற்கும் பல வகையான உணவு வகைகளை ருசிப்பதற்கும்  இந்த மலேசியா மடாணி பொது உபசரிப்பு துணை புரிந்ததாக குணராஜ் கூறினார். 

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் நடைபெறும் இரண்டாவது நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நிகழ்வு இதுவாகும். இந்த உபசரிப்பின் முதலாவது மற்றும் பிரதான இம்மாதம் 6ஆம் தேதி தாமான் செந்தோசா, எம்.பி.கே.மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பொது உபசரிப்பின் மூன்றாவது நிகழ்வு 21ஆம் தேதி காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பண்டார் பொட்டானிக் டேவான் பொட்டானிக் பல்மாவில் நடைபெறும்.


Pengarang :