ஷா ஆலம், ஜூன் 8- சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ்வின் புதல்வி ஜனனி கடந்தாண்டு எஸ்.பி.எம் தேர்வில் அனைத்து 10 பாடங்களிலும் “ஏ“ பெற்று சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வு முடிவில் இன்று வெளியாகியுள்ள நிலையில் அனைத்து பாடங்களிலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் பள்ளிக்கும் பெற்றோர்களான வீ. கணபதிராவ், புவனேஸ்வரிக்கு தம்பதியருக்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.
தமிழ்ப்பள்ளி மாணவி என்ற பெருமைக்குரிய ஜனனி தனது தொடக்கக் கல்வியை எமரால்ட் தமிழ்ப்பள்ளி மற்றும் ஷா ஆலம் சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளியில் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிள்ளான் மெதடிஸ்ட் பெண்கள் பள்ளி (எம்.ஜி.எஸ்) மாணவியான ஜனனியின் தாயார் இடைநிலைப்பள்ளி சிறப்பு மாணவர்களுக்கான ஆசிரியை ஆவார்.