NATIONAL

சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

ஷா ஆலம், ஜூன் 9: இன்று மாலை வரை சிலாங்கூரில் உள்ள மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் மற்றும் பலத்த காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

அம்மாவட்டங்கள் கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர் மற்றும் கிள்ளான் ஆகும். நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலை ஏற்படும் என்று மெட்மலேசியா தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும். சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :