MEDIA STATEMENTNATIONAL

பேரரசர் தம்பதியரின் தந்தையர் தின வாழ்த்து

கோலாலம்பூர் ஜூன் 18-  தந்தை என்ற அந்தஸ்தை தாங்கி நிற்கும் அனைவருக்கும் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல் முஸ்தபா பில்லா ஷா தனது தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்

ராஜா பெர்மைசூரி அகோங் தெங்கு அஜிசா அமீனா மைமுனா இஸ்கண்டரியாவும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளதாக அரண்மனையின் முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ளது

அந்த முகநூலில் இடம் பெற்றுள்ள போஸ்டர் ஒன்றில் “தந்தைக்கு நன்றி“ என்ற வாசகத்தோடு மாமன்னர் தம்பதிகள் தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம்  இடம் பெற்றுள்ளது.

குடும்பத்தைக் காப்பதில் தந்தைமார்கள் புரியும் தியாகம் மற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வார ஞாயிற்றுக்கிழமை இந்த தந்தையர் தினம் அனுசரிக்கப்படுகிறது

“நன்றி தந்தையே“ எனும் கருப்பொருளில்  இவ்வாண்டுக்கான தந்தையர் தினம்  ஜூன் மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட படுகிறது.


Pengarang :