ECONOMYNATIONAL

கிள்ளான் பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறும் நெடுஞ்சாலைகளில் சீரான போக்குவரத்து

கோலாலம்பூர், ஜூன் 29- இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிள்ளான்
பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறும் முக்கிய நெடுஞ்சாலைகளில்
வாகனப்போக்குவரத்து சீராகக் காணப்பட்டது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தாப்பா முதல் கோப்பெங் வரையிலான
பகுதியில் மட்டுமே போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக மலேசிய
நெடுஞ்சாலை வாரியம் (எல்.எல்.எம்.) கூறியது.
கிழக்குக் கரை மாநிலங்களுக்குச் செல்லும் கோம்பாக் டோல் சாவடி,
கிழக்குக் கரை நெடுஞ்சாலை 1 மற்றும் கிழக்குக் கரை நெடுஞ்சாலை 2
ஆகியவற்றில் போக்குவரத்து சீராக உள்ளதாக எல்.எல்.எம். பேச்சாளர்
பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
சொந்த ஊர்களுக்கு திரும்பும் வாகனமோட்டிகளின் வசதிக்காக
வெளியிடப்பட்டுள்ள பயண நேர அட்டவணையைப் பின்பற்றி நடக்கும் படி
வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :