சுபாங். ஜூலை.1- இன்று மதியம் சுபாங் ஜெயா விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட கெஅடிலான் இந்திய தலைவர்களின் கூட்டம் வரும் சட்ட மன்றத் தேர்தலில் சிதறாமல் இந்தியர்களின் வாக்குகளை கவர முடிவு எடுத்துள்ளது.
சிலாங்கூரில் உள்ள மொத்த இந்திய வாக்காளர்களையும் நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணியும் கூட்டாக சந்திக்கும். இந்த தேர்தலில் நாம் வழங்கும் வலுவான ஆதரவு, ஒற்றுமை அரசு மேலும் ஆக்ககரமாக செயல்படவும்., சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரியின் தலைமைத்துவம், மேலும் பல நல்ல திட்டங்களை அமல்படுத்த பங்களிப்போம் என்று செந்தோசா சட்ட மன்ற உறுப்பினர் குணராஜ் சூளுரைத்தார்.
சிலாங்கூரில் உள்ள 22 சாபாங் ( தொகுதி ) தலைவர்களுடன் தேர்தல் குறித்து கலந்துரையாடினார். 9 சாபாங் தலைவர்களும் 13 தொகுதிகளில் துணைத் தலைவர் மற்றும் உதவித் தலைவர் பொறுப்புகளில் இருக்கும் இந்திய பிரதிநிதிகள் கலந்துக் கொண்ட இக்கூட்டத்திற்கு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தலைமை வகித்தார்.
எல்லா சட்ட மன்றங்களிலும் இந்திய தேர்தல் இயந்திரம் அமைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர். இந்தியர்கள் கணிசமாக இருக்கும் கிள்ளான், ஷா ஆலாம், செலாயாங், கோல சிலாங்கூர் போன்ற பகுதிகளில் மாபெரும் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது. எல்லா சட்ட மன்றங்களிலும் பிரச்சார கூட்டங்கள் நடத்துவது. இந்தியர்கள் வாழும் பகுதியில் வீடு வீடாக சென்ற பிரச்சாரம் செய்து சிலாங்கூர் மாநிலம் நம்பிக்கை கூட்டணியின் கோட்டை என்பதை நிலை நிறுத்துவோம்.
அதே வேளையில் இந்த மகத்தான வெற்றியின் வழி நாட்டு பிரதமராக இருக்கும் டத்தோ ஸ்ரீ அன்வாரின் தலைமைத்துவத்திற்கு வலு சேர்ப்போம்.
.சிலாங்கூர் மாநில அரசியல் மலேசியாவின் அரசியலுக்கு அடித்தளம். சிலாங்கூர் வெற்றியின் வழி நெகிரி, பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் ஒற்றுமை அரசு மலர வழி வகுக்கும் என்று குணராஜ் கூறினார்.
சிலாங்கூர் மந்திரி புசார் அமிருடின் சாரியின் கரத்தை வலு படுத்துவதன் வழி இந்நாள் வரையில் அவர் இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிவரும் அருச்சேவை தொடர வேண்டுகிறேன்.
விரைவில் சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ் மொழியில் கற்றல் கற்பித்தலோடு இடை நிலைப் பள்ளி அமைய விருக்கிறது. பெட்டாலிங் மாவட்டத்தில் இப்பள்ளி தொடங்க 8 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டு விட்டது என்று செர்டாங் தொகுதி பி.கெ ஆர் கட்சித் தலைவர் அன்பரசு தெரிவித்தார்.
இந்த இந்தியர்கள் தேர்தல் இயந்திரத்தில் இந்திய சமுதாயத்தின் சார்பில் தொகுதி தலைவர்கள், துணைத் தலைவர்கள், உதவித் தலைவர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், நகராண்மைக் கழக உறுப்பினர்கள், இந்திய சமுதாய தலைவர்களாக செயல் படும் 64 (கெ.கெ.ஐ) தலைவர்களும் இடம் பெறுவார்கள் என்று குணராஜ் தெரிவித்தார்.
மாநில தேர்தல் முடியும் வரை இக்குழு இரவு பகல் பார்க்காமல் கடுமையாக பாடு படும். மகத்தான வெற்றியே நமது இலக்கு என்று குணராஜ் சூளுரைத்தார்.
.