ECONOMYMEDIA STATEMENT

புக்கிட் மெலாவத்தி, தெலுக் பியா கானான் சாலை மூன்றாம் காலாண்டில் தரம் உயர்த்தப்படும்

ஷா ஆலம், ஜூலை 2- புக்கிட் மெலாவத்தி தொகுதியில் உள்ள தெலுக் பியா கானான் சாலையைத் தரம் உயர்த்தும் பணிகள் இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கப்படும்.

அந்த சாலையில் அடிக்கடி நிகழும் விபத்துகளைக் கருத்தில் கொண்டு இந்த சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த தொகுதிக்கான நடப்பு சட்டமன்ற உறுப்பினர் ஜூவாய்ரியா ஜூல்கிப்ளி கூறினார்.

சுமார் ஐந்து லட்சம் வெள்ளி செலவிலான இந்த குறுகிய காலச் சாலை சீரமைப்புத் திட்டம் ஓராண்டு காலத்தில் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.

எனினும், இந்த சாலையை சீரமைக்கும் நீண்ட காலத் திட்டம் 12வது மலேசியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.  சுமார் 1 கோடியே 46 லட்சம் வெள்ளி செலவில் இந்த திட்டத்தை சிலாங்கூர் மாநில பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் என்றார் அவர்

இந்த சாலையை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலம் இங்கு நிகழும் சாலை விபத்து பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் எனத் தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சாலையின் நிலவரத்தை நேரில் காண்பதற்காக கோல சிலாங்கூர் மாவட்ட பொதுப்பணித் துறை பொறியாளர் இஞ்சினியர் ஹபிட்சா இட்ரிசுடன் ஜூவாய்ரியா கடந்த ஜூன் 22ஆம் தேதி அங்கு வருகை மேற்கொண்டார்.


Pengarang :