MEDIA STATEMENTNATIONAL

பிரதமர் அன்வாருக்கு கோலாலம்பூர் மருத்துவமனையில் சிறிய பல் அறுவை சிகிச்சை

கோலாலம்பூர், ஆக 21 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நேற்று கோலாலம்பூர் மருத்துவமனையில் சிறிய பல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் தனது முகநூலில் வெளியிட்ட சுருக்கமான பதிவின் மூலம் இதனைக் தெரிவித்துள்ளார்.

தற்போது வரை நான் இன்னும்  மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்பட்டு வருகிறேன். நாளை காலை வரை வார்டில் தங்கியிருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளேன் என்று  நேற்று அவர் கூறினார்.

இன்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டார். அவரது வாகனங்கள்  காலை 9.37 மணியளவில் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியேறியது.


Pengarang :