NATIONAL

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், ஆகஸ்ட் 22: சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இன்று காலை  இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவை கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோலா லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்கள் ஆகும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட் மலேசியா) முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.

இதே வானிலை தான் கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா, பெர்லிஸ், நெகிரி செம்பிலான், ஜொகூர் மற்றும் சரவாக் மாநிலங்களிலும் நிகழும் என கணிக்கப்பட்டுள்ளது.

பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாக பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :