ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பத்து தீகா, ஸ்ரீ செர்டாங் உள்ளிட்ட இடங்களில் நாளை மலிவு விற்பனை

ஷா ஆலம், செப் 1- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான அத்தியாவசிய உணவுப் பொருள் மலிவு விற்பனை நாளை மேலும் மூன்று தொகுதிகளில்  நடைபெறவுள்ளது.

“ஜூவாலான் ஏசான் ரஹ்மா” எனும் இந்த மலிவு விற்பனை பத்து தீகா தொகுதியிலுள்ள செக்சன் 20 மேடான் செலேராவிலும் ஸ்ரீ செர்டாங் தொகுதியின் சூராவ் அல்-மூர்னியிலும் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

மேலும்,  புக்கிட் அந்தாராபங்சா தொகுதியின் ஜாலான் வங்சா 2, ரெஸ்டோரன் கிராவேன் காஃபி உணவகம் அருகிலும் இந்த மலிவு விற்பனை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பி.கே.பி.எஸ். தனது முகநூல் பக்கத்தில் கூறியது.

 ஜூவாலான் ஏசான் ரஹ்மா என பெயர் மாற்றம் கண்டுள்ள இந்த ஏசான் ராக்யாட் மலிவு விற்பனைத் திட்டம் உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் ஒத்துழைப்புடன் வரும் டிசம்பர் மாதம் வரை தொடர்ந்து   நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.


Pengarang :