ECONOMYMEDIA STATEMENT

நாட்டின் 90வது ஆயுதப்படை தினத்தை முன்னிட்டு  மாமன்னர் வாழ்த்து

கோலாலம்பூர், செப் 16 – இன்று அனுசரிக்கப்படும் 90 வது மலேசிய ஆயுதப்படை (ஏடிஎம்) தினத்தை முன்னிட்டு மாட்சிமை தங்கிய பேரரசர்  அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா அல்ஹாஜ் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

நாட்டின்  ஆயுதப்படைகள் அனைத்துலக நிலையில் தொடர்ந்து மரியாதைக்குரிய அமைப்பாக  விளங்க வேண்டும் என்று தாம் பிரார்த்திப்பதாக இஸ்தானா நெகாராவின்  அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்ட பதிவில் அவர் சொன்னார்.

ஆயுதப்படைகளின் உச்ச தளபதி என்ற வகையில் நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் தற்போதைய மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆற்றிய சேவைகள் மற்றும் தியாகங்களை தாம் பெரிதும் போற்றுவதோடு மனமார்ந்த  பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக கொள்வதாக அவர் தெரிவித்தார்.

அனைத்து உறுப்பினர்கள், படைவீரர்கள் மற்றும் மலேசிய ஆயுதப் படையில் பணியாற்றிய அனைவருக்கும் எனது 90வது மலேசிய ஆயுதப்படை தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் .

நாட்டின் இறையாண்மை மற்றும்  பாதுகாப்பை உறுதி செய்யும் பணியின்  கொல்லப்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கும் எனது நன்றியுணர்வை வெளிப்படுத்திக் கொள்கிறேன் என அவர்  தெரிவித்தார்.

மலேசிய ஆயுதப் படைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.


Pengarang :