ஷா ஆலம், செப் 30- சிலாங்கூரில் நான்கு மாவட்டங்களில் இன்று இரவு 7.00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களோடு கோலாலம்பூரிலும் இந்நிலை நீடிக்கும் என்று அம்மையம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது. இதே வானிலை பேராக், கிளந்தான், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், சரவாக் மற்றும் சபாவின் பல பகுதிகளில் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு அதிகமாக இருக்கும் போது இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இந்த இடியுடன் கூடிய மழை தொடர்பான எச்சரிக்கை என்பது ஆறு மணிநேரத்திற்கும் மேற்போகாத ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும். வானிலை தொடர்பான நம்பகமானத் தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2020/07/Hujan-KL-960x651.jpg)