ஷா ஆலம், அக் 28- சிலாங்கூர் மாநில நிலையிலான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வு வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை கிள்ளானில் நடைபெறவுள்ளது.
லிட்டிலில் இந்தியாவில் உள்ள பாடாங் செட்டி, கார் நிறுத்துமிடத்தில் இரவு 7.00 மணி தொடங்கி 11.00 மணி வரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரிவார்.
இந்த நிகழ்வில் பொது மக்கள் திரளாகக் கலந்து சிறப்பிக்குமாறு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ. பாப்பாராய்டு கேட்டுக் கொள்கிறார்.