அம்பாங் ஜெயா, 12 நவ: தீபாவளி கொண்டாடும் தொகுதி மக்களின் வீடுகளுக்கு நேரடி வருகை அளித்த டத்தோ மந்திரி புசாரும், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், தொகுதி சுற்றியுள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் கூறினார் .
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது மனைவி டத்தின் ஸ்ரீ மஸ்தியானா முஹமட் உடன், உலு கிள்ளான் மாநில சட்டமன்ற தொகுதி இந்திய சமூகத் தலைவர் ஆர் சுரேந்திரன் குடும்பத்தினரை கம்போங் ஃபஜாரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மந்திரி புசார் முன்னவர் வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் செலவிட்டார். அங்கு தீபாவளி பண்டிகை பலகாரங்களை ருசி பார்த்ததுடன் அக்குடும்ப நலன் கேட்டறிந்தார். மந்திரி புசாருக்கு விருப்பமான தோசை மற்றும் ஆட்டுக் கறியும் அவருக்கு பரிமாறப்பட்டது.
அப்போது, தீபாவளியை முன்னிட்டு அமிருடின் தனது குடும்பத்துடன் தமது வீட்டுக்கு வருவது இது இரண்டாவது முறை என்றும், இங்குள்ள மக்களின் தேவைகளை உணர்ந்து எப்போதும் செயல் படும் தலைவர் கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினரும், மந்திரி புசாருமாகிய அவர் நமது வீட்டுக்கு விஜயமளித்தது தம்மை நெகிழ்ச்சி படுத்தியதாகவும் ஆர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.