ECONOMYMEDIA STATEMENT

மூன்று மாவட்டங்களுடன் கோம்பாக்கிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்

ஷா ஆலம், நவம்பர் 16: மாலை 6 மணி வரை சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

அவை உலு சிலாங்கூர், கோம்பாக் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் என்று முகநூல் மூலம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கெடா, பேராக் மற்றும் பகாங்கில் உள்ள சில பகுதிகளுக்கு கூடுதலாக பெர்லிஸ், பினாங்கு, கோலாலம்பூர் மற்றும் மலாக்கா முழுவதும் இதே வானிலை  நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே நிலை நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களையும் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :