கோம்பாக் டிச 2 – கோம்பாக் நாடாளுமன்ற மற்றும் சுங்கை துவா சட்டமன்றத் தொகுதி நிலையிலான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு இன்று டிசம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை மாலை மிக விமரிசையாக ஏற்பாடாகியுள்ளது .
தாமான் ஸ்ரீ செலாயாங் டத்தாரான் சுங்கை துவாவில் (பழைய வார்த்தா) இரவு மணி 7.01 தொடங்க வேண்டிய பொது உபசரிப்பு மழையின் காரணமாக சற்று தாமதமானாலும் மழையையும் பொருட்படுத்தாமல் பல இன மக்கள் திரண்டு வந்து கொண்டிருப்பதாக நமது நிருபர் தகவல் அனுப்பியுள்ளார்.
சிலாங்கூர் இந்தியர்களிடம் என்றும் நல்ல செல்வாக்கை பெற்றுள்ள சுங்கை துவா சட்டமன்ற உறுப்பினரும், கோம்பாக் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தன் தொகுதி மக்களை இது போன்ற விருந்து உபசரிப்புகள் வழங்கி , நல்லுறவை வளர்ப்பதில் அதிக சிரத்தை காட்டுவார் என்று அங்குள்ள இந்தியர்கள் கூறுகின்றனர்.
இன்று மிக சிறப்பான முறையில் பல வித உணவு மற்றும் சுவை பானங்களுடன் பொது உபசரிப்பை ஏற்பாடு செய்திருக்கிறார்.
இந்த பொது உபசரிப்பில் பாரம்பரிய நடனம், அதிர்ஷ்ட குலுக்கு, வாணவேடிக்கை
உள்ளிட்ட நிகழ்வுகளோடு ஹலால் உணவு விருந்து உபசரிப்பும் நடைபெறுகிறது.