ANTARABANGSAMEDIA STATEMENT

போரில் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு  சுபாங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வெ.10.000 நிதியுதவி

ஷா ஆலம், டிச 3- இஸ்ரேலின் கோரத் தாக்குதல்களில் குடியிருப்புகளையும் உடமைகளையும் இழந்து நிர்க்கதியாக இருக்கும் பாலஸ்தீன மக்களுக்கு உதவும் பொருட்டு சுபாங் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்யன் ஆலயம் 10,000 வெள்ளியை நன்கொடையாக வழங்கியது.

நேற்று ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பாலஸ்தீன மனிதாபிமான அறக்கட்டளை நிதியின் பொறுப்பாளர்களிடம் இந்த நிதி ஒப்படைக்கப்பட்டது.

கடந்த இரு மாதங்களாக திரட்டப்பட்ட இந்த 10,000 வெள்ளி நிதி பாலஸ்தீன மக்களுக்கு லாடாங் சுபாங்  வட்டார மக்கள் வழங்கிய பங்களிப்பாகும் என்று ஆலயத் தலைவர் கே.விஜயன் கூறினார்.

பாலஸ்தீனத்தில் நிகழ்ந்து வரும் போரில்  உயிரிழப்புகளையும் பெரும் துன்பங்களையும் அனுபவித்து வரும் சிறார்கள், பெண்கள் உள்ளிட்ட அந்நாட்டு மக்களுக்கு உதவும் நோக்கில் இந்த நிதியுதவியை தாங்கள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.
.
ஆலயம் சார்பாக இத்தகைய மனிதாபிமான உதவிகளை வழங்குவது இதுவே முதன் முறை எனக் கூறிய அவர், இத்தகைய உதவிகள் வரும் காலத்தில்  தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.


Pengarang :