ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

 கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களுக்கு மாலை 6 மணி வரை கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 6: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கோலாலம்பூர் உட்பட சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை, சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்கள் என அந்நிறுவனம் தெரிவித்தது.

கோலாலம்பூர் மற்றும்லாக்கா மேலும் பேராக், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சபாவில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டருக்கு  அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.


Pengarang :