MEDIA STATEMENTNATIONAL

தொற்று நோயைத் தவிர்க்க எப்போதும் சுய பாதுகாப்பு  நடவடிக்கைகளை எடுக்க- ஜமாலியா வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயா டிச 15 ;  இன்று ஒரு அறிக்கையில், சிலாங்கூர் 49 வது தொற்றுநோயியல் வாரத்தில் (டிசம்பர் 3-9) 4,326 நோய்த்தொற்றுகளுடன், முந்தைய வாரத்தில் 2,278 ஆக இருந்த கோவிட்-19 தொற்றுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்று ஜமாலியா குறிப்பிட்டார்.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 9 வரை மாநிலத்தில் ஒட்டுமொத்த கோவிட்-19 இறப்பு விகிதம்  0.2 சதவீதமாக உள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

“இதைக் கருத்தில் கொண்டு, தொற்று நோயைத் தவிர்க்க எப்போதும் சுய பாதுகாப்பு  நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது,” என்று அவர் கூறினார்.

தொற்று அறிகுறிகள் இருந்தால்,பொதுமக்கள் முக கவரிகளை அணிய ஊக்குவிக்கப் படுகிறார்கள், குறிப்பாக வரையறுக்கப்பட்ட   மற்றவற்றுடன், நெரிசலான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு ஜமாலியா பொது மக்களை வலியுறுத்தினார்,

“முதியவர்கள், நாள்பட்ட நோய்-வாய் கண்டுள்ளவர்கள் மற்றும் குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் போன்ற அதிக ஆபத்துள்ள  பிரிவு  மக்களை பாதுகாக்க இந்த நடைமுறை மிகவும் முக்கியமானது.”

மக்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனித்துக் கொள்ளவும்,மற்றவர்களை  அடிக்கடி தொடும்  தேவை உள்ளவர்கள்  அடிக்கடி கைகளை கழுவி சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால், பரிசோதனை, அறிக்கை, தனிமைப்படுத்தல், தகவல் மற்றும் தேடுதல் (TRllS) நெறிமுறையை பயிற்சி செய்யுமாறும், அறிகுறிகள் தீவிரமடைந்தால் மருத்துவரை அணுகு மாறும் ஜமாலியா பொது மக்களை வலியுறுத்தினார்.

நோய்த் தொற்றுகள், நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்க கோவிட்-19 தடுப்பூசியின் முதன்மை மற்றும் பூஸ்டர் டோஸ்களைப் பெறவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

“சிலாங்கூரில் வசிப்பவர்கள் அனைவரையும் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறு, அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு க்காகவும் கோவிட்-19 பரவுவதை எதிர்த்துப் போராடுவதில் தங்கள் பொறுப்புகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசு அழைப்பு விடுக்கிறது,” என்று அவர் கூறினார்.


Pengarang :