ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிறிஸ்துமஸ் பெருநாளில் குடும்பம் மற்றும் நட்பின் பிணைப்பு வலுப்பெறும்- மந்திரி புசார் நம்பிக்கை

ஷா ஆலம், டிச 25- இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் கிறிஸ்துவ அன்பர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இந்த பெருநாள் குதூகலமானதாகவும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கிடையிலான பிணைப்பை வலுப்படுத்தக்கூடியதாகவும் அமையும் எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.

இன்று கிறிஸ்துமஸ் தினத்தைக்  கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த பெருநாள் சிறப்பானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும் அதே வேளையில் குடும்ப உறவுகள் வலுப்பெறுவதற்கும் நண்பர்களோடு நேரத்தைச் செலவிடுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.


Pengarang :