ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள உறுப்பினர்களுக்கு கடன் மீட்சித் திட்டம்- ஹிஜ்ரா வழங்குகிறது

ஷா ஆலம், ஜன 14- நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள உறுப்பினர்கள் தவணை முறையில் கடனைத் திரும்பச் செலுத்துவதற்குரிய மீட்சித் திட்டத்தை யாயாசான் ஹிஜ்ரா அறவாரியம் வழங்குகிறது.

ஹிஜ்ரா அறவாரியத்தில் கடன் பெற்றுள்ள தொழில்முனைவோர் தவணை கடன் முறையை மறுசீரமைப்பு செய்வதற்கு அருகிலுள்ள ஹிஜ்ரா அலுவலகங்களை அணுகலாம் என்று அந்த கடனளிப்பு நிறுவனம் கூறியது.

கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான அட்டவணையை மறுசீரமைப்பு செய்வதற்கு ஏதுவாக உங்களுக்கு மீட்சித் திட்டத்தை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இதன் தொடர்பான மேல் விபரங்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள  18 ஹிஜ்ரா அலுவலகங்களில் உள்ள கடன் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

ஹிஜ்ரா அறவாரியத்தில் கடன் பெற்ற தொழில்முனைவோர் தங்கள் கடன் பாக்கி குறித்து அறிந்து கொள்ள  அகப்பக்கத்தை வலம் வரலாம் என்றும் அவது குறிப்பிட்டது.

கடன் தொகையை தவறாது தவணை முறையில் செலுத்தி வரும் தொழில் முனைவோருக்கு ஹிஜ்ரா நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அந்த சுழல் நிதியைக் கொண்டு இதர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்கு உதவும் வகையில் கடனாளின் தவணைப் பணத்தை முறையாகச் செலுத்துவது அவசியமாகும் என அந்த அமைப்பு வலியுறுத்தியது.

ஹிஜ்ரா அறவாரியத்தின் பல்வேறு திட்டங்கள் வாயிலாக கடன் பெற்றுள்ள 87,000 பேரில் 78 விழுக்காட்டினர் தவணைப் பணத்தை முறையாகச் செலுத்தி வருவதாகவும் ஹிஜ்ரா கூறியது.

சிறிய அளவில் வர்த்தகத்தை தொடங்க விரும்பும் அல்லது வர்த்தகத்தை விரிவுபடுத்த விரும்பும் தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் பல்வேறு கடனுதவித் திட்டங்களை ஹிஜ்ரா அறிமுகப்படுத்தியுள்ளது.

 


Pengarang :