தாப்பா, பிப் 2- பீடோரில் அமைந்துள்ள குடிநுழைவுத் துறையின் தற்காலிக தடுப்புக் காவல் முகாமிலிருந்து 131 ரோஹிங்கியா சட்டவிரோதக் குடியேறிகள் நேற்றிரவு தப்பினர்.
இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பாஸ்ரி, அவர்களில் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் கூறினார்.
அந்த விபத்து வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 335வது கிலோ மீட்டரில் பீடோர் அருகே நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.