ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாளை அரசு ஊழியர்கள் முன்னிலையில் மந்திரி புசார் முக்கிய உரை நிகழ்த்துவார்

ஷா ஆலம், மார்ச் 21-   நாளை மார்ச் 22ஆம் தேதி  வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு ஊழியர்களுடனான ரமலான் மடாணி மஹாபா நிகழ்வில்   முக்கிய உரையை  மந்திரி  புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்க உள்ளார்.

மாநில நிர்வாக கட்டிடத்தின் ஜூப்ளி பேராக் அரங்கில்  காலை 8 மணிக்குத் தொடங்கும் ரமலான் தஸ்கீராவில் அவர் பங்கேற்பதோடு, முடாஹ்ன்யா பெர்வகாஃப் பிரச்சார இயக்கத்தையும்  தொடக்கி வைப்பார்.

மாநில அரசு செயலாளர் டத்தோ ஹாரிஸ் காசிம் மற்றும் மாநில நிதி அதிகாரி டாக்டர் அகமது  அகமது தாஜுடின் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

பொது மக்கள் காணும் வகையில் இந்நிகழ்வு பேஸ்புக் மீடியா சிலாங்கூர் மற்றும் யூடியூப் சிலாங்கூர் டிவி மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படும்.


Pengarang :