கோத்தா பாரு, ஏப் 7- மாச்சாங், டத்தாரான் கெமக்கோத்தஹான் நோன்புப் பெருநாள் சந்தையில் கடந்த சனிக்கிழமை 1,730 வெள்ளி மதிப்புள்ள பட்டாசுகள் மற்றும் வாணவெடிகளை விற்பனை செய்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அந்த கடை மீது போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது 18 மற்றும் 51 வயதுடைய அவ்விருவரும் கைது செய்யப்பட்டதாக மாச்சாங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரின்டெண்டன்ட் அகமது ஷா பிகி ஹூசேன் கூறினார்.