ஷா ஆலம், ஏப் 10 சிலாங்கூர், கோலாலாம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இன்று மாலை 5 மணி வரை கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கெடா, மலாக்கா மற்றும் பெர்லிஸ் முழுவதுமாகவும் பேராக், கிளந்தான், பகாங், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சரவாக் மாநிலங்களின் சில பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என அது கூறியது.
மணிக்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான இடியுடன் கூடிய தீவிர மழை ஒரு மணி நேரம் அல்லது அதற்கும் மேலாக நிகழும் என்று எதிர்பார்க்கப்படும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படும் என அத்துறை தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
.இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும்.
வானிலை தொடர்பான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளம், சமூக ஊடகங்களைப் வலம் வரலாம். சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு myCuaca செயலியை பதிவிறக்கம் செய்யவும். .