கோலா குபு பாரு, ஏப்ரல் 13: கோலாகுபு பாரு இடைத்தேர்தலுக்கான PH பக்காத்தான் ஹராப்பான் (ஹரப்பான்) வேட்பாளர்கள் இன்னும் பரிசீலனையில் உள்ளதாக ஜ.செ.க தேசிய துணைத் தலைவர் கோபிந்த் சிங் டியோ கூறினார்.
சிலாங்கூர் ஜ.செ.க தலைவரான கோபிந்த் சிங், இடைத்தேர்தலில் ஹராப்பான் வேட்பாளர்களாக பல பெயர்களை பரிந்துரையாக அவரது கட்சி பெற்றதாகவும், பெயர் பட்டியல் இன்னும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். “பி.எச்.PH சிலாங்கூருடன் விவாதிக்கப்பட்டு , வேட்பாளர் முடிவு செய்யப்படும், பின்னர் PH மத்திய நிலையில் ஐந்து தலைவர்கள் கொண்ட குழு மேல் முடிவெடுக்கும் என்றார்.
குருத்வாரா சாஹிப் கல்சா லேண்டில் நடைபெற்ற வைசாகி தின பிரார்த்தனை விழாவுக்குப் பிறகு சந்தித்தபோது, “கோலா குபு பாரு இடைத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கான முடிவை, விரைவில் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் வேட்புமனு தினத்திற்கு முன்பு, அப்பெயர் அறிவிக்கப்படும்” என்று அவர் கூறினார்.
வைசாகி தினத்துடன் இணைந்து குருத்வாரா சாஹிப் கல்சா லேண்ட் கேம்ப் தளத்திற்கு வருகை தந்த, டிஜிட்டல் அமைச்சரான கோபிந்த், பஞ்சாபி மற்றும் சீக்கிய சமூகத்தின் நாட்காட்டியின்படி அறுவடை பருவத்தின் தொடக்கமான வைசாகி தின கொண்டாட்டத்துடன், அப்பகுதி மக்களுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதும் நோக்கமாகும் என்றார்.
தேர்தல் ஆணையம் (SPR) கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி அறிவித்ததை போன்று, வேட்பாளர் நியமனம் மற்றும் இடைத்தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிக்கும் தேதியை முறையே ஏப்ரல் 27 (சனிக்கிழமை) மற்றும் மே 7 (செவ்வாய்க்கிழமை) என நிர்ணயித்துள்ளது.
கோலா குபு பாரு மாநில சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் மார்ச் 21 அன்று இறந்ததைத் தொடர்ந்து,அத் தொகுதி காலியானது.
2013 ஆம் ஆண்டு முதல் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்தின் கீழ் உள்ள கோலா குபு பாரு மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த 58 வயதான லீ, சில ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி இறந்தார்.
2022 ம் ஆண்டின், 15வது பொதுத் தேர்தலுக்கு (GE15) பின், ஏழாவதாக கோலா குபு பாரு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கோலா குபு பாரு இடைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் 40,226 பேர் உள்ளனர். அவர்களில் 39,362 வழக்கமான வாக்காளர்கள், 625 போலீசார், 238 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் மற்றும் ஒரு வெளிநாட்டில் இருக்கும் வாக்காளர் உள்ளார்.