ECONOMYhealthMEDIA STATEMENT

ஸ்ரீ செர்டாங், தஞ்சோங் சிப்பாட் தொகுதிகளில் அடுத்த வாரம் இலவச மருத்துவப் பரிசோதனை

ஷா ஆலம், ஜூன் 2- இம்மாதம் 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெறும் இலவச மருத்துவ பரிசோதனை  இயக்கங்களில் பங்கேற்று பயனடையுமாறு அவ்விரு தொகுதிகளைச் சேர்ந்த பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்த பரிசோதனை இயக்கம் வரும்   8ஆம் தேதி  காலை  9. 00 மணி முதல் மாலை 3.00 மணி வரை டேவான் ஜூப்ளி இமாஸ், கம்போங் எண்டா, பந்திங் எனும் முகயிவரியிலும் ஜூன் 9ஆம் தேதி டேவான் செர்பகுணா எம்.பி.எஸ்.ஜே. ஸ்ரீ கெம்பாங்கானிலும்  நடைபெறும் என்று   பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.

உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண்கள், பற்கள் உள்ளிட்ட சோதனைகளை உள்ளடக்கிய  இலவச சுகாதார  இயக்கத்தில் பங்கேற்று பயனடைவதற்கான்  வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

செலங்கா செயலியில் தொடக்க மதிப்பீட்டு பாரத்தின் மூலம் ஒவ்வொவருக்கும்  இடர் மதிப்பீடு செய்யப்படுவதால் இந்த இயக்கத்தில் பங்குபெற விரும்புவோர்  அந்த செயலியில் முன்னதாக  பதிவு செய்ய ஊக்குவிக்கப் படுருகிறார்கள்.

பதிவு செய்வதில்  ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 1800226600 என்ற எண்ணில் செல்கேர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் முகநூல்  மூலம் தெரிவித்தார்.

இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை  தொடர மாநில அரசு  32  லட்சம் வெள்ளியை  ஒதுக்கியுள்ளதாக 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


Pengarang :