ECONOMYMEDIA STATEMENT

மனிதக் கடத்தலில் பாதிக்கப்பட்ட இந்தோனேசியப் பெண்கள் மீட்பு

கோலாலம்பூர், ஜூன் 16 –  ஷா ஆலமில் உள்ள பணிப்பெண் சேவை நிறுவனத்தின் தங்குமிடத்தின் மீது கடந்த  வெள்ளிக்கிழமை (ஜூன் 14) போலீசார் நடத்திய சோதனையில்  மனிதக்  கடத்தலில் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 17 இந்தோனேசியப் பெண்கள் மீட்டப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் 2007ஆம் ஆண்டு ஆட்கடத்தல் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு (ATIPSOM) சட்டத்தின் 44(1) வது பிரிவின் கீழ் மீட்கப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை (சி.ஐ.டி.) டி3 பிரிவு உதவித் தலைவர் எஸ்.ஏ.சி. சோஃபியன் சான்தோங் தெரிவித்தார்.

25 முதல் 45 வயதுக்குட்பட்ட அப்பெண்கள் அனைவரும் ஓப்ஸ் பிந்தாஸ் நடவடிக்கையின் வாயிலாக  இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டனர்.

வீட்டு பணிப்பெண்களாக  வேலை வழங்கப்பட்டு  கட்டாயத் தொழிலாளர்களாக அவர்கள் பயன்படுத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது. அவர்களில் சிலர் ஊதியம் ஊதியம் வழங்கப்படாமல் சுரண்டப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை முதலாளிகளுடன் பணிபுரிந்தது ஒரு முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் சிலர் தங்களுக்கு எந்த சம்பளமும் கிடைக்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர் என்று சோஃபியன் கூறினார்.

அந்தப் பணிப்பெண்களை வேலைக்கு அனுப்பும்  முதலாளிகள் மற்றும் மேற்பார்வையாளர்களாக செயல்பட்ட 31 மற்றும் 40 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்களும் இந்த சோதனையில் கைது செய்யப்பட்டனர் அவர்கள் 2007ஆம் ஆண்டு ATIPSOM சட்டத்தின் 12 வது பிரிவின் கீழ் விசாரிக்கப்படுவார்கள் என்றார் அவர்.


Pengarang :