ஷா ஆலம், மார்ச் 28-
மேன்மை தங்கிய சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராஃபுடின் இட் ரிஸ் ஷா லங்காவியில் நடைபெறும் 2019ஆம் ஆண்டு அனைத்துலக கடல் மற்றும் ஆகாயப் படை கண்காட்சிக்கு (லீமா ’19) இன்று சிறப்பு வருகை அளித்தார்.
அவருடன் சிலாங்கூர் ராஜா மூடா தெங்கு அமிர் ஷா லீமா கண்காட்சியைப் பார்வையிட்டதாக சிலாங்கூர் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கண்காட்சியில் இடம்பெறும் வான் சாகச நிகழ்ச்சியை மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்- சுல்தான் அப்துல்லாவுடன் சேர்ந்து சிலாங்கூர் ஆட்சியாளரும் கண்டுகளித்தார் என்றும் அவ்வற்க்கை குறிப்பிட்டது.
மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு 42,000 வர்த்தகப் பேராளர்கள் உட்பட மொத்தம் 240,000 பார்வையாளர்கள் வருகை புரிவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.