Pasukan Petugas Kesihatan Selcare menjalankan Saringan Komuniti Covid-19 dari rumah ke rumah anjuran Kerajaan Selangor secara percuma di Rantau Panjang, Klang pada 19 April 2020. Foto ASRI SAPFIE/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

கோவிட-19: சிலாங்கூர் 12 புதிய இறக்குமதி சம்பவங்களை பதிவு செய்துள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 30:

சிலாங்கூர் மாநிலத்தில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ள 27 கோவிட்-19 புதிய சம்பவங்களில் 12 இறக்குமதி சம்பவங்கள் ஆகும் என சிலாங்கூர் மாநில நடவடிக்கை அறை (பிஜிஎன்எஸ்) தெரிவித்தது. இந்த 12 நோயாளிகளும் ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டில் இருந்து திரும்பியவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.

” உள்நாட்டு சம்பவங்களில், கோம்பாக் மாவட்டத்தில் 12, பெட்டாலிங் (2), உலு லங்காட் (1)ஆகிய பகுதிகளில் கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் இது வரை 1,431 கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகும். இதில் 1,233 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்,” என்று பிஜிஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Pengarang :