莎阿南市政厅
PBTSELANGOR

பிகேபி தளர்த்தப்பட்டாலும் எம்பிஎஸ்ஏ தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் !!!

ஷா ஆலம், மே 1:

திங்கட்கிழமை தொடங்கி அமலுக்கு வரும் நிபந்தனைக்கு உட்பட்ட நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபிபி) நடைமுறைகள் தளர்த்தப்பட்டாலும் ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் (எம்பிஎஸ்ஏ) அதிகாரிகள் கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று எம்பிஎஸ்ஏவின் பொது உறவு பிரிவின் தலைவர் ஷாரின் அமாட் தெரிவித்தார். பொது மக்கள் பிகேபிபி வழிமுறைகளை கடை பிடித்து வருவதை அமலாக்க அதிகாரிகள் ஒவ்வொரு நிமிடமும் கண்காணித்து வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

” இதற்கு முன்பு இருந்தது போல தொடர்ந்து கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடரும். மே 12 வரை அதிகாரிகளின் பணிகளில் எந்த ஒரு தளர்வும் கொடுக்கப்படாது,” என்று சிலாங்கூர் இன்றுக்கு அவர் தெரிவித்தார்.


Pengarang :