Anggota kesihatan menyembur cecair pembasmi kuman di pasar awam sekitar Shah Alam dan daerah Sepang.
ECONOMYHEALTHPBTSELANGOR

கிருமி நாசினி தெளிக்கும் பணி முடிந்தது- ஷா ஆலம், செக்சன் 6 சந்தை மீண்டும் திறக்கப்பட்டது

ஷா ஆலம், ஜூன் 1– கிருமி நாசினி தெளிக்கும் பணிக்காக கடந்த நான்கு நாட்களாக மூடப்பட்ட ஷா ஆலம், செக்சன் 6 சந்தையை ஷா ஆலம் மாநகர் மன்றம் இன்று திறந்தது.

அந்த மார்க்கெட்டில் வருகையாளர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதோடு ரேலா உறுப்பினர்களும் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்த நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கேற்ப மாநகர் மன்றம்  விதித்துள்ள கட்டுப்பாடுகளை வணிகர்களும் வருகையாளர்களும் பின்பற்றி நடக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

ஷா ஆலம் மாநகர் மன்ற இடைக்கால டத்தோ பண்டார்  முகமது ரஷிடி ருஸ்லானும் கோத்தா அங்கிரிக் சட்டமன்ற உறுப்பினர் நஜ்வான் ஹலிமியும் அந்த சந்தைக்கு வருகை புரிந்து பொதுமக்களுக்கு கிருமி நாசினியை வழங்கியதாகவும் அவர்  குறிப்பிட்டார்.

 


Pengarang :