ஷா ஆலம், ஜூன் 2- அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் செயல்பட்ட காரணத்திற்காக பெட்டாலிங் ஜெயா, தாமான் மேடானில் உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்றுக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
நேற்றிரவு 10.45 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கான எஸ்.ஒ.பி. விதிமுறைகளை அத்தொழிற்சாலை மீறியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பக்ருடின் அப்துல் ஹமிட் கூறினார்.
அந்த தொழிற்சாலையின் மேலாளரான 41 வயது பெண்மணி ஒருவருக்கு பத்தாயிரம் வெள்ளி அபராதத்திற்கான குற்றப்பதிவு வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதே சமயம், அத்தொழிற்சாலையில் வேலை செய்த ஏழு பெண்கள் மற்றும் ஒரு ஆணுக்கு தலா 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.