கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று சற்று குறைந்து 5,304 ஆனது
ஷா ஆலம், ஜூன் 13- கோவிட்-19 நோய்த் தொற்றின் எண்ணிக்கை நேற்றை விட சற்று குறைந்து இன்று 5,304 ஆக பதிவானது. சிலாங்கூரில் அதிகமானோர் அதாவது 1,973 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையுடன் சேர்த்து நாட்டில் இதுவரை 657,508 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாநில வரியாக வருமாறு-
சிலாங்கூர் (1,973),கோலாலம்பூர் (462), சபா (335), ஜொகூர் (363), சரவா (544), நெகிரி செம்பிலான் (332), பினாங்கு (256), கிளந்தான் (179), பேராக் (121), கெடா(301), மலாக்கா (145), பகாங் (78), திரங்கானு (46), லபுவான் (158 ), புத்ரா ஜெயா (7), பெர்லிஸ் (5).