ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஸ்ரீ ஆயு குடியிருப்பு பகுதியில் தற்காலிக மினி சுகாதார மையம்

ஷா ஆலம், ஜூலை 3- கடந்த புதன் கிழமை தொடங்கி கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட பண்டார் பாரு பாங்கி, செக்சன் 4இல் உள்ள பங்சாபுரி ஸ்ரீ ஆயுவில் தற்காலிக மினி சுகாதார கிளினிக் திறக்கப்படும்.

வட்டார மக்களுக்கு சிகிச்சை வழங்குவதை நோக்கமாக கொண்ட இந்த சுகாதார மையம் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும் என்று பெட்டாலிங் மாவட்ட அதிகாரியும் உலு லங்காட் பேரிடர் நிர்வாகக் குழுவின் தலைவருமான நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மற்றும் மருந்துகள் தரும் வசதிகளைக் கொண்ட இந்த சுகாதார மையத்தை உலு லங்காட் மாவட்ட சுகாதார அலுவலகம் திறந்துள்ளது என்று அவர் சொன்னார்.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு பிறகு வரும் நோயாளிகளை கவனிப்பதற்கு ஏதுவாக பண்டார் பாரு பாங்கியில் உள்ள சுகாதார மையம் கூடுதல் நேரம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :